Tuesday, April 21, 2020

பூமி தினம் 2020

ஓசோன் படை சிதைவு, பச்சைவீட்டு விளைவு, புவி வெப்பமடைதல், பாலைவனமாதல், துருவ பனிப்பாறை உருகல், கடல் மட்ட உயர்வு... இயற்கை எதிர்கொள்ளும் துயர்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

மனிதன் (Homo sapiens sapiens) இவ் உலகில் ஒரு சாதாரண உறுப்பினர் தான்... 8.7 மில்லியன் (± 1.3 மில்லியன்உயிரினங்களில் மனிதனும் ஒருவன் எனும் போது ஒரு இனமாக மனிதனது எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கதே...

மேலே குறிப்பிட்ட சூழற்பிரச்சினைகள் 99.9% மனிதனின் கண்டுபிடிப்புகள் மற்றும் மனிதனால் சூழலுக்கு எதிரான செயற்பாடுகள் மூலமாகவே ஏற்பட்டுள்ளன... காலம் காலமாக சூழற்பிரச்சினைகளையும் அதன் விளைவுகளையும் எடுத்துகூறுவதும் அதற்கான தீர்வுகளை முன்வைப்பதுடன் மனிதனின் கடமை முடிவடைந்து விடுகிறது ...

இயற்கைக்கு தேவை தீர்வு மட்டுமல்ல அதட்கான தீர்ப்பும் தான்... மனிதனால் இழைக்கப்பட்ட பாதிப்புக்கு மனிதனே சரிசெய்யவிட்டால் இயற்கையே மனிதனை முடக்கிவிட்டு தன்னை குணப்படுத்திவிடும்... Covid-19 pandemic இனை அதுபோல நாம் எண்ணலாம்... 

இயற்கையோடு ஒன்றிணைந்ததாக மனிதனின் வாழ்க்கை போக்கினை மாற்றுவோம்... வாழும் வீட்டினை (பூமி) அழித்து விட்டு புது வீடு (செவ்வாய்) கனவு முட்டாள்தனமானது... மனிதனாய் வாழ்வோம்... பூமி தாயை பாதுகாப்போம்... #பூமி தினம் 2020